Ads Area

பத்தாம் வகுப்பு தமிழ் பலவுள் தெரிக குறைக்கப்பட்ட பாடத்திட்டம்

பத்தாம் வகுப்பு தமிழ் பலவுள் தெரிக

குறைக்கப்பட்ட பாடத்திட்டம்

பலவுள் தெரிக.

1. 'காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில்   

    அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது –

     அ) இலையும் சருகும்          

    ஆ) தோகையும் சண்டும்

    இ) தாளும் ஓலையும்            

     ஈ) சருகும் சண்டும்

2. எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும் –

  அ) எந் + தமிழ் + நா           

  ஆ) எந்த + தமிழ் + நா

  எம் + தமிழ் + நா          

   ஈ) எந்தம் + தமிழ் + நா

3. 'கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது' - தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும்  

    வினையாலணையும் பெயரும் முறையே –

    அ) பாடியகேட்டவர்          

    ஆ) பாடல்பாடிய

    இ) கேட்டவர்பாடிய          

     ஈ) பாடல்கேட்டவர்

4. வேர்க்கடலைமிளகாய் விதைமாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை –

    அ) குலை வகை       

    ஆ) மணி வகை

    இ) கொழுந்து வகை

     ஈ) இலை வகை

5. "உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம் உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்" – பாரதியின்   

   இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை?

   அ) உருவகம்எதுகை

   ஆ) மோனைஎதுகை 

    இ) முரண்இயைபு

 ஈ) உவமைஎதுகை

6. 'பெரிய மீசைசிரித்தார் - வண்ணச் சொல்லுக்கான தொகையின் வகை எது?

    அ) பண்புத்தொகை

   ஆ) உவமைத்தொகை 

   இ) அன்மொழித்தொகை

   ஈ) உம்மைத்தொகை

7. அறிஞருக்கு நூல்அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக்  

    காரணமாக அமைவது –

    அ) வேற்றுமை உருபு 

    ஆ) எழுவாய்   

    இ) உவம உருபு    

    ஈ) உரிச்சொல்

8. 'உனதருளே பார்ப்பன் அடியேனே' - யாரிடம் யார் கூறியது?

   அ) குலசேகராழ்வாரிடம் இறைவன் 

   ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார்

   மருத்துவரிடம் நோயாளி    

   ஈ) நோயாளியிடம் மருத்துவர்

9. குலசேகர ஆழ்வார் 'வித்துவக்கோட்டம்மாஎன்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார்.  

பூனையார் பால்சோற்றைக் கண்டதும் வருகிறார் ஆகிய தொடர்களில் இடம்பெற்றுள்ள வழுவமைதி முறையே –

   அ) மரபு வழுவமைதிதிணை வழுவமைதி         

   ஆ) இடவழுவமைதிமரபு வழுவமைதி

   இ) பால் வழுவமைதிதிணை வழுவமைதி       

   ஈ) கால வழுவமைதிஇடவழுவமைதி

10. அருந்துணை என்பதைப் பிரித்தால்......................

    அ) அருமை + துணை        

   ஆ) அரு + துணை

    இ) அருமை + இணை       

    ஈ) அரு + இணை

11. ”இங்கு நகரப் பேருந்து நிற்குமா?” என்று வழிப்போக்கர் கேட்டது ............ வினா. “அதோ,   

     அங்கே நிற்கும்.” என்று மற்றொருவர் கூறியது .......... விடை.

     அ) ஐயவினாவினா எதிர் வினாதல்           

     ஆ)அறிவினாமறை விடை

     இ) அறியா வினாசுட்டு விடை         

      ஈ) கொளல் வினாஇனமொழி விடை

12. “அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை அகற்றி மதிக்கும் தெருளை“ - என்று  

     இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது?

      அ) தமிழ்               

      ஆ) அறிவியல்              

       இ) கல்வி           

       ஈ) இலக்கியம்

13. குளிர் காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள் ..............

   அ) முல்லைகுறிஞ்சிமருத நிலங்கள்    

   ஆ) குறிஞ்சிபாலைநெய்தல் நிலங்கள்

   இ) குறிஞ்சிமருதம்நெய்தல் நிலங்கள்   

    ஈ) மருதம்நெய்தல்பாலை நிலங்கள்

14. கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?

   அ) நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்

   ஆ) ஊரில் விளைச்சல் இல்லாததால்

   இ) அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்

    ஈ) அங்கு வறுமை இல்லாததால்

15. சரியான அகரவரிசையைத் தேர்ந்தெடுக்க.

   அ) உழவுமண்ஏர்மாடு              

   ஆ) மண்மாடுஏர்உழவு

   இ) உழவுஏர்மண்மாடு           

    ஈ) ஏர்உழவுமாடுமண்

16. ‘மாலவன் குன்றம் போனாலென்னவேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்’ -  

    மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே-

    அ) திருப்பதியும் திருத்தணியும்       

   ஆ) திருத்தணியும் திருப்பதியும்

    இ) திருப்பதியும் திருச்செந்தூரும்   

    ஈ) திருப்பரங்குன்றமும் பழனியும்

17. ‘தன் நாட்டு மக்களுக்குத் தந்தையும் தாயும் மகனுமாக இருந்த அரசன்’ என்னும் மெய்க்கீர்த்தித்  

    தொடர் உணர்த்தும் பொருள் –

    அ) மேம்பட்ட நிருவாகத்திறன் பெற்றவர்     

    ஆ) மிகுந்த செல்வம் உடையவர்

    இ) பண்பட்ட மனிதநேயம் கொண்டவர்   

   ஈ) நெறியோடு நின்று காவல் காப்பவர்

18. இருநாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம் ………….

     அ) நாட்டைக் கைப்பற்றல்        

    ஆ) ஆநிரை கவர்தல்

     இ) வலிமையை நிலைநாட்டல்

    ஈ) கோட்டையை முற்றுகையிடல்

19. தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சிகருதியது ...........

   அ) திருக்குறள்  

  ஆ) புறநானூறு   

   இ) கம்பராமாயணம்     

    ஈ) சிலப்பதிகாரம் 

20. மேன்மை தரும் அறம் என்பது.......

   அ) கைமாறு கருதாமல் அறம் செய்வது

   ஆ) மறுபிறப்பில் பயன் பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது

   இ) புகழ் கருதி அறம் செய்வது

    ஈ) பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது

21. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும் பொருள்களின் இருப்பைக் கூட  

     அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர்

    அ) உதியன்சேரலாதன்      

     ஆ) அதியன்பெருஞ்சாத்தன்

    இ) பேகன்கிள்ளிவளவன்  

    ஈ) நெடுஞ்செழியன்திருமுடிக்காரி

22. காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர்.........

    அ) இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது     

    ஆ) என்மனம் இகழ்ந்தால் இறந்துவிடாது

    இ) இகழ்ந்தால் இறந்துவிடாது என்மனம்   

    ஈ) என்மனம் இறந்துவிடாது இகழ்ந்தால்

23. சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம் ..........

    அ) அகவற்பா    

    ஆ) வெண்பா    

     இ) வஞ்சிப்பா    

     ஈ) கலிப்பா

24. சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது

   அ) அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்தல்

   ஆ) பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல்   

   இ) அறிவியல் முன்னேற்றம்         

  ஈ) வெளிநாட்டு முதலீடுகள்

25. பூக்கையைக் குவித்துப் பூவே புரிவொடு காக்க என்று ........................................ வேண்டினார்.

    அ) கருணையன்எலிசபெத்துக்காக   

ஆ) எலிசபெத்தமக்காக

    இ) கருணையன்பூக்களுக்காக      

  ஈ) எலிசபெத்பூமிக்காக

26. வாய்மையே மழைநீராகி – இத் தொடரில் வெளிப்படும் அணி

   அ) உவமை       

  ஆ) தற்குறிப்பேற்றம்       

  இ) உருவகம்       

   ஈ) தீவகம்

27. கலையின் கணவனாகவும் சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன் –

    இக்கூற்றிலிருந்து நாம் புரிந்துகொள்வது:

    அ) தம் வாழ்க்கையில் பெற்ற விளைவுகளைக் கலையாக்கினார்

    ஆ) சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்

    இ) அறத்தைக் கூறுவதற்காக எழுதினார்

    ஈ) அழகியலுடன் இலக்கியம் படைத்தார்

PREPARED BY: KALVITHUGAL.BLOGSPOT.COM

 

 


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area